சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என உதயநிதி தெரிவித்தார். ஆனால் எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம்(பாஜக அலுவலகம்) மட்டும் சென்று விடாதீர்கள் என உதயநிதி கூறினார். ஜார்ஜ் கோட்டையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்முறையாக பேசிய உதயநிதியால் வழியில் கலகலப்பு ஏற்பட்டது.