மதுரை: பெண்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா மனுதாக்கல் அளித்தார். பாஜகவின் ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற கிளை விரைவில் விசாரிக்க உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தார். வேடசந்தூரில் 2018-ல் இந்து முன்னணி கூட்டத்தில் பெண்கள் பற்றி ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.