சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். வி.கே.சசிகலாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளது பற்றிய கேள்விக்கு டிடிவி தினகரன் இவ்வாறு பதிலளித்தார். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அமமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.