×

திருமழிசை பஜாரில் கத்தியுடன் சுற்றிய 2 பேர் கைது

திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த திருமழிசை பஜாரில் 2 பேர் கத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டு சுற்றித் திரிவதாக பூந்தமல்லி காவல் துணை ஆணையர் முத்துப்பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அம்பத்தூர் சண்முகா புரத்தை சேர்ந்த விக்னேஷ் (24) மற்றும் அயப்பாக்கம் திருவள்ளுவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த செல்வம் (19) என்பதும் தெரியவந்தது. மேலும் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : Thirumalisai Bazaar , 2 arrested for stabbing in Thirumalisai Bazaar
× RELATED திருமழிசை பஜாரில் கத்தியுடன் சுற்றிய 2 பேர் கைது