சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
கோளரங்கம் உருவாக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் வேண்டும். இதற்கு கட்டிட பணி செலவு ரூ.15.20 கோடியாகும். பணியாளர் மற்றும் பராமரிப்புச் செலவுக்கு தொடர் செலவாக ரூ.65 கோடி ஆகும். வரும் காலங்களில் தமிழ்நாட்டின் நிதி நிலைக்கு ஏற்ப முதல்வரின் ஆலோசனைப்படி கோளரங்கம் அமைக்கப்படும். புதிய கோளரங்கம் அமைக்க முடிவு செய்தால் மதுரையில் முதலில் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.