×

தகாத வார்த்தையில் பேசியதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திலகவதி மகன் மீது புகார்: போலீசார் விசாரணை

சென்னை: வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் ஏறும் போது தகாத வார்த்தையில் பேசி மிரட்டியதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் திலகவதி மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஜயகுமார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், அடுக்குமாடி குடியிருப்பின் ஏ பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி மகன் டாக்டர் பிரபு திலக் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார், தனது வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தார்.

அப்ேபாது திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக், விஜயகுமாரை பார்த்து ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயகுமார், சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் டாக்டர் பிரபு திலக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : IAS ,Tilakwati , Retired IAS officer, Thilagavathy, complaint, police investigation
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...