×

காங். முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார். குஜராத், இமாச்சல பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் இருந்து தொடர்ச்சியாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. மேலும், 2024ல் மக்களவை தேர்தலும் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை காங்கிரஸ் தலைவர் சோனி்யா காந்தி வகுத்து வருகிறார். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த சில நாட்களாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், விரைவில் காங்கிரசில் இணைவார் என கருதப்படும் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் சோனியா பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில், பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். இதில், தங்கள் மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்வதற்காக வகுத்துள்ள திட்டங்களை இருமாநில முதல்வர்களும் தெரிவித்தனர்.


Tags : Kong ,Sonia , Cong. Sonia consults with chiefs
× RELATED விளவங்கோடு இடைத்தேர்தலில் 4 கட்சிகள் சார்பில் பெண் வேட்பாளர்கள்!