×

விவசாய வேலைக்கு வந்த பள்ளி மாணவியை மிரட்டி உல்லாசம்: போக்சோவில் கொடூர முதியவர் கைது

திருவள்ளூர்: விவசாய வேலைக்கு வந்த மாணவியை மிரட்டி பலமுறை உல்லாசமாக இருந்த கொடூர முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், செஞ்சி கிராமம், மேலாண்டை தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (63). இவர் விவசாயி. செஞ்சி கிராமத்தில் உள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி படிப்பு முடிந்ததும் பூ பறிக்கவும் கொய்யாக்காய் பறிக்கவும் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த மாணவி, கடந்தாண்டு வயலில் கொய்யாக்காய் பறித்தபோது அங்கு வந்த பரசுராமன், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அங்கிருந்த கொய்யாத்தோப்புக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.  பின்னர் அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இங்கு நடந்தது பற்றி பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று முதியவர் மிரட்டியிருக்கிறார். இதை பயன்படுத்தி பலமுறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், மாணவி கர்ப்பமானது தெரிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கேட்டபோது, நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாய், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்படி திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முதியவர் பரசுராமனை கைது செய்தார். விசாரணைக்கு பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : Bokso , Intimidating schoolgirl who came to work on the farm: A cruel old man arrested in Pokோmon
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...