×

நிலக்கோட்டை அருகே ஊழியர் பணம் திருடி மது அருந்தியதால் கொலை: தொழிலதிபர் உட்பட 6 பேர் அதிரடி கைது..!!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தொழிலதிபர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்து கொடைரோடு ரயில்வே பாலம் அருகே வெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. சிசிடிவி காட்சி மூலம் அம்மையநாயக்கனூரில் இருந்து நிலக்கோட்டை சாலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்ற கார், கொடைரோடு சுங்கச்சாவடியை கடந்து சென்றது தெரியவந்துள்ளது. அந்த காரின் உரிமையாளரான முருகனை பிடித்து விசாரித்ததில், பல்லடத்தில் முருகன் நடத்தி வந்த ஹோட்டலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை சேர்ந்த முத்து என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

ஹோட்டல் கல்லா பெட்டியில் இருந்து ரூ.4 ஆயிரத்தை திருடி மது அருந்திய முத்துவை, உரிமையாளர் முருகன் உட்பட 6 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த முத்துவின் உடலை, காரில் ஏற்றி கொடைரோடு ரயில்வே பாலம் அருகே வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தொழிலதிபர் முருகன் உட்பட 6 பேரையும் கைது செய்து, கார், கட்டை, கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். ரூ.4 ஆயிரம் பணத்தை திருடியதற்காக தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Nilakkottai , Fortress, employee, theft, murder, 6, arrested
× RELATED நிலக்கோட்டை குரும்பபட்டியில் பட்டா சிறப்பு முகாம்