×

சென்னையை அடுத்து முதல்வரின் பார்வை கோவையில் தான் உள்ளது: பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

சென்னை: சென்னையை அடுத்து முதல்வரின் பார்வை கோவையில் தான் உள்ளது என அதிமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் மெய்யநாதன் பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் பேசுகையில், ‘கோயமுத்தூர் வடக்கில் நவீன விளையாட்டு மையம் அமைக்க அரசு முன்வரவேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், ‘சென்னையை அடுத்து கோவையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள், பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கங்கள், சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் குளங்கள் அமைக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், கோவையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆர்.எஸ். புரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கோவை வடக்கு தொகுதியில் நவீன விளையாட்டு மையம் அமைக்க தேவையான 7 ஏக்கர் நிலத்தை உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் ஏற்பாடு செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையை அடுத்து முதல்வரின் பார்வை கோவையில்தான் உள்ளது’ என்றார்.

Tags : Chennai ,Chief Minister ,Coimbatore ,Minister ,Meyyanathan , Chennai, Chief, Parvai, Coimbatore, Meyyanathan
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்...