×

காவிரி கூட்டு குடிநீர் திட்டம்-திட்ட அறிக்கை பெறப்பட்டு ரூ. 9,660 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளது: அமைச்சர் கே.என் நேரு தகவல்

சென்னை: காவிரி கூட்டு குடிநீர் திட்டம்-திட்ட அறிக்கை பெறப்பட்டு ரூ.9,660 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளது என்று அமைச்சர் கே.என் நேரு பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் கு பிச்சாண்டி , கீழ்பென்னாத்தூர் தொகுதி , வேட்டவலம் பேரூராட்சிக்கு , ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.மேலும் பேரூராட்சிகள் மாநிலம் முழுவதும் தாயில்லா பிள்ளையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சி பகுதிகளில் ஓரளவு பணிகள் தான் நடைபெற்று உள்ளது. 490 பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அருகில் இருக்கும் குடிநீர் ஆதாரங்களை மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யபட்டு வருகிறது. 130 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்கள் பயன் பெற கூடிய வகையில் 9,660 கோடி ரூபாய் செலவில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. முதல்வருடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Tags : Minister ,KN Nehru , Cauvery Joint, Drinking Water Project, KN Nehru
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...