×

பெரம்பலூர் அருகே சிறுமி மீது ஒருதலை காதல்: எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மீது இளைஞர் நாட்டுவெடிகுண்டு வீச முயற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே14 வயது சிறுமியை காதலித்து வரும்  இளைஞரை தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தனபால்,14 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்தார். 9ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அடிக்கடி தொந்தரவும் செய்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், தனபாலின் வீட்டுக்கு சென்று கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது, வாஷிங்மெஷினில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து, சிறுமியின் பெற்றோர் மீது தனபால் வீச முயன்றுள்ளார்.

இதை தனபாலின் சகோதரர் நந்தகுமார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் ஆய்வு செய்து, 23 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினார். விசாரணையில், யூடியூப்- ஐ பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தனபால் தயாரித்தது தெரியவந்தது. வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதா? அல்லது சமூக விரோத செயல்களுக்காக தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Perambalur , Perambalur, girl, one-sided love, youth, bomb
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி