×

திருப்பூரில் மதம் மாற வற்புறுத்துவதாக பள்ளி ஆசிரியை மீது மாணவி போலீசில் புகார்

திருப்பூர்: திருப்பூரில் மதம் மாற வற்புறுத்துவதாக ஆசிரியை மீது மாணவி ஒருவர் போலீசில் புகார் செய்தார். திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவரின் 12 வயது மகள் திருப்பூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வகுப்பு ஆசிரியை ஒருவர் மாணவியை மதம் மாற வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவி மற்றும் அவரது தந்தை நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, ‘‘நான் மற்ற மாணவிகளிடம் விசாரித்த வகையில், புகார் தெரிவித்த மாணவி வீட்டுப்பாடங்களை சரிவர செய்யாமல் வந்துள்ளார். இது குறித்து ஆசிரியர் கேட்டு கண்டித்துள்ளார். மற்றபடி, புகாரில் கூறியுள்ளபடி எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளேன்’’ என்றார்.

Tags : Tirupur , Tiruppur, school teacher forced to convert The student complained to the police
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு