×

2 குழந்தை பிறந்த நிலையில் ஒரு குழந்தை இறப்பு: ரொனால்டோ கவலை

லிஸ்பன்: 2 குழந்தை பிறந்த நிலையில் ஒரு குழந்தை இறந்து விட்டதாக ரொனால்டோவின் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். போர்ச்சுகல் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிகெஸ் ஆகியோர் இரட்டைக் குழந்தையை எதிர்பார்த்தனர். அதேபோல் அவர்களுக்கு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. ஆனால், ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது.

இந்தத் தகவலை சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, ‘எங்களது குழந்தை இழப்பால் நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு இடமளிக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

Tags : Ronaldo , 2 Infant deaths at birth: Ronaldo worried
× RELATED 38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ...