×

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் பலி: தனியார் பள்ளியின் முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம்

சென்னை: வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் முதன்மை கல்வி அதிகாரி டிஸ்மிஸ் செய்தது. பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்துக்கு குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதம் வளசரவாக்கத்தில் ஆழ்வார்திருநகரில் உள்ள பள்ளியில் வேன் மோதி மாணவர் தீக்க்ஷித் உயிரிழந்தார்.  


Tags : School van Mothi Student Pally ,Chennai , Chennai, van, student killed, school principal, 3 people, dismissed
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...