×

வேலுமணி ஒப்புதல்

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க 376  கி.மீ. தூரத்திற்கு திட்டம் தீட்டப்பட்டு 300 கி.மீ. தூரத்திற்கு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர்  தேங்கியது. தற்போது, 150 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. தியாகராயநகர் பகுதியில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டபோது 3 ஆண்டுகள் நீர் தேங்கவில்லை. மழை வராது என நினைத்து, மாம்பலம் கால்வாயை அடைத்து வேலை பார்த்தபோதுதான் நீர் தேங்கியது.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: அதை கவனிக்காமல் விட்டதால்தான் வெள்ள நீர் தேங்கி விட்டதாக உறுப்பினர் வேலுமணியே ஒப்புக்கொண்டு விட்டார்.  நாங்களும், இதை விட்டு விடுகிறோம் என்றார்.

Tags : Velumani , Velumani approval
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...