×

மதுரை ஆவினில் தினமும் 1000 லிட்டர் பால் பாக்‍கெட்டுகள் திருட்டு: நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்தால் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு

மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில் நாள்தோறும் 1000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்தால், அலட்சியத்துடன் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை சாத்தமங்கலம் பகுதியில் ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து நாள்தோறும் 6 லட்சத்திற்கு மேலான பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பால் பாக்கெட்டுகளை ஆவின் டிப்போக்களுக்கு விநியோகம் செய்ய 70 வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ஆவின் பால் டிப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்போது ஒவ்வொரு கிரேனிலும் ஒரு லிட்டர் பால் பாக்கெட் குறைந்து வருவதாகவும், இதனால் ஆவின் பால் பாக்கெட் விற்பனையாளர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலை தொடர்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்த வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பால் பாக்கெட் திருட்டில் ஈடுபடுவதாகவும், இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்தால் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்குடன் இருப்பதாகவும் டிப்போ வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். டிப்போ வியாபாரிகளுக்கு வரக்கூடிய பால் பாக்கெட்டுகளை திருடி, வாகன ஒப்பந்த ஊழியர்கள் தேநீர் கடைக்காரர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.      


Tags : Madurai Avin , Madurai, Avin, 1000l, milk pocket, theft, company officer, negligence
× RELATED பல கோடி ரூபாய் முறைகேடுகள் தொடர்பாக...