×

அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் தின வாழ்த்து

சென்னை: அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திடும், கிறித்தவ பெருமக்களுக்கு, ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா நல்வாழ்த்துகள். கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானைப் போற்றும் இன்னாளில், வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Md. ,KKA ,Stalin ,Easter Day , We are committed to creating a society where love and unity prevail: Chief Minister MK Stalin's Easter greetings
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...