×

20 ஆதிவாசி குழந்தைகளை தத்தெடுத்த மோகன்லால்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மோகன்லால், கேரளாவில் விஷ்வசாந்தி என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். தற்போது ஆண்டுதோறும் 20 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கான கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஆதிவாசிகள் வசிக்கும் அட்டப்பாடி கிராமத்தில் இருந்து 20 குழந்தைகளை தத்தெடுத்துள்ள மோகன்லால், அவர்களின் கல்லூரி படிப்பு முடியும் வரையிலான செலவை ஏற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘15 வருடங்கள் அவர்களுக்கு பெற்றோராகவும், ஆசிரியராகவும் இருப்பேன்’ என்றார்.

Tags : Mohanlal , Mohanlal adopts 20 tribal children
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...