சென்னை: சென்னை கொரட்டூரில் நள்ளிரவில் பால் வாகனத்தை வழி மறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் நாசர். அப்போது கூடுதலாக கொண்டு சென்ற சுமார் 100 பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பன்னையில் பதப்படுத்தபட்டு பாக்கெட் செய்யப்படும் பால் பாக்கெட்கள் சுமார் 85 வாகனங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கபடுவது வழக்கம் அவ்வாறு அனுப்பி வைக்கபட்ட வாகனத்தை கொரட்டூர் அருகே நள்ளிரவில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.
அந்த வாகனத்தில் சுமார் 2500 மதிப்புள்ள 100 பால் பாக்கெட்கள் கூடுதலாக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. வேறு எந்த எந்த வாகனங்களில் இப்படி கூடுதல் பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்து கண்டறியபடும் எனவும் தமிழக அரசுக்கு களங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.