×

விவசாய நிலங்களுக்கு இடையே எரிவாயு குழாய் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: விவசாய நிலங்களுக்கு இடையே எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்த நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனத்தினர் 3 நாளாக எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்து வருவதாகவும், இதனை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன், தன்னுடைய நிலம் பறிபோக போக போகிறது என்று தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

வேளாண் தொழிலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிவாயு குழாய்களை அமைக்கும் பணியை வேடிக்கை பார்ப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். எனவே, முதல்வர் இது குறித்து உடனடியாக கெயில் நிறுவனத்திடம் பேச்சுநடத்தி, எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்க வலியுறுத்தவும், உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Tags : OPS , Between agricultural lands Laying the gas pipe To be stopped: OPS request
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்