×

திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டை அரவைக்கு அனுப்பிவைப்பு

திருவாரூர் : திருவாரூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தின் பொது விநியோக திட்ட அரவை பணிக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை குறுவை மற்றும் சம்பா பருவத்தில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் மெ.டன் அளவில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 42 வேகன்களில் 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகளை அரவைக்காக அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : Tiruvarur ,Thiruvallur , Thiruvarur, Tiruvallur, Rice, Train
× RELATED திருவாரூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம்