×

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை சத்தம் போட்டதால் கொல்ல முயற்சி: கொடூர வாலிபருக்கு தர்மஅடி

கோவை: ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சுவரில் அடித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.  கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (28). இவர் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன், பக்கத்து வீட்டில் இருந்த 5 வயது சிறுமியிடம் தனது வீட்டில் பூனைக்குட்டி உள்ளதாக ஆசைவார்த்தை கூறி அதனை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். சிறுமி வீட்டிற்குள் சென்றவுடன் கதவை தாளிட்டுக்கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது, சிறுமி அழுதுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹரிஹரசுதன் சிறுமியின் தலையை சுவரில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், அங்கு திரண்டு வந்து கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கம் தாள் இடப்பட்டிருந்ததால், திறக்க முடியவில்லை. ஹரிஹரசுதனும் கதவை திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்ற பொதுமக்கள் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு, அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஹரிஹரசுதனை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் காமகொடூரன் ஹரிஹரசுதனை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அன்னூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ஹரிஹரசுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஹரிஹரசுதன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Dharmaadi , Attempt to kill 5-year-old girl for making sexual noise: Dharmaadi to a violent teenager
× RELATED சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு தர்மஅடி