×

சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி கைது

சென்னை: சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தீ வைத்துவிட்டு மர்மநபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் சதீஷ்குமாரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். காரை விற்றுவிட்டு நகை வாங்கித்தரும்படி மனைவி தொல்லை கொடுத்ததால் காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.  


Tags : BJP ,Madurai , Chennai, Maduravayal, car, fire, BJP executive, arrested
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...