மதுரை: மதுரை தெப்பக்குளம் பாக்கியம் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் பெண் சிசு உடல் தொப்புள்கொடியுடன் மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் வீசப்பட்ட பெண் சிசுவின் தலை சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண் சிசுவை குப்பைத் தொட்டியில் வீசி சென்றது யார் என தெப்பக்குளம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.