×

நாளை மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை: தீவுத்திடலில் நடைபெறும் ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சியில் அதிகளவில் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அந்த பகுதியில் நாளை மாலை 4 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தீவுத்திடலில் 16ம் தேதி (நாளை) மாலை 7 மணிக்கு ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொள்வார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மாலை 4 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை தேவைப்படும் பட்சத்தில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

* காமராஜர் சாலையில் இருந்து அண்ணாசாலை மற்றும் ஈவெரா சாலை செல்பவர்கள், உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து இடதுபக்கம் திரும்பி வாலாஜா சாலை, அண்ணாசாலை, பல்லவன் சாலை வழியாக ஈவெரா சாலையை அடையலாம்.
* ராஜாஜி சாலை, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், வடக்கு கோட்டை பக்க சாலை, (என்எப்எஸ் சாலை) முத்துசாமி சாலை, ஈவெரா சாலை, பல்லவன் சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
* ஈவெரா சாலையில் இருந்து போர் நினைவு சின்னம் வழியாக காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், முத்துசாமி சாலைக்கு செல்லாமல், எம்எம்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பல்லவன் சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
* அண்ணாசாலையில் இருந்து ராஜாஜி சாலை செல்பவர்கள் பல்லவன் சாலை, ஈவெரா சாலை, முத்துசாமி சாலை, ராஜா அண்ணாலை மன்றம் வழியாக ராஜாஜி சாலையை அடையலாம்.
* வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் தீவுத்திடலின் நுழைவாயில் -3 மற்றும் நுழைவாயில் -8 வழியாக வந்து மைதானத்தில் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வாகனம் வந்தடையும் வழி மற்றும் வாகனம் நிறுத்துமிடம்:
* ராயபுரத்திலிருந்து வருபவர்கள் ராஜாஜி சாலை, பாரிமுனை, வடக்கு கோட்டை சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணாசாலையில், தீவுத்திடல் நுழைவாயில்-9 வழியாக வந்தடையலாம்.
* ஈவெரா சாலையில் இருந்து வருபவர்கள், சென்ட்ரல் ரயில் நிலையம், முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை, தீவுத்திடல் நுழைவாயில்-9 வழியாக வந்தடையலாம்.
* அண்ணா சாலையில் இருந்து வருபவர்கள் பெரியார் சிலை, மன்றோ சிலை, வாலாஜா சந்திப்பு வந்து வலது “யு டர்ன்’’ எடுத்து தீவுத்திடல் நுழைவாயில் -9 வழியாக வந்தடையலாம்.
* நிகழ்ச்சிக்கு வரும் பேருந்துகள் கடற்கரை சாலை உள்வட்ட சாலையில் நிறுத்த வேண்டும்.
* காமராஜர் சாலையில் இருந்து வருபவர்கள் சுவாமி சிவானந்தா சாலை, பெரியார் சிலை, அண்ணா சிலை, மன்றோ சிலை வழியாக நுழைவாயில்-9 மூலம் வாகனம் நிறுத்துமிடத்திற்கு செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Srinivasa Tirukkalyana island , Traffic change in Srinivasa Tirukkalyana island area tomorrow evening: Municipal Police announcement
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...