×

கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமல் ஊழல் மேலும் 5 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

கரூர்: கரூர் மாவட்டத்தில் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை, வால்காட்டுப்புதூர் உட்பட 4 இடங்களில் சாலை அமைக்காமலேயே சாலை அமைத்ததாக கணக்கு காட்டி ரூ.3 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா உள்பட 4 பேர் நேற்றுமுன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக ஈரோடு நபார்டு மற்றும் கிராமச்சாலைகள்  கோட்ட பொறியாளர் நித்திலன், கரூர் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவி  கோட்ட பொறியாளர் ரபீக், உதவிப்பொறியாளர்கள் தீபிகா, கார்த்திக், ஈரோடு நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்ட கணக்கர் சத்யா  ஆகிய 5 பேரை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு  துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

Tags : Karur , Road, Corruption, Highways, Officers Suspended
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...