சென்னை: திமுக அரசு, சமூக நீதி அரசு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சமத்துவ நாயகனாக இருந்து தமிழக அரசை, சமூக நீதி அரசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் எனவும் கூறினார்.