×

தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 லஷ்கர் தீவிரவாதிகள் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பொமாய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடூர பாலா கிராமத்திற்கு அருகிலுள்ள சோனார்வைன் பாலத்தில் அருகே பாதுகாப்பு படையினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ​​மூன்று பேர் அவ்வழியாக சென்றனர். இருளை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். உஷாரான பாதுகாப்பு படையினர் விரட்டிச் சென்று அவர்கள் மூவரையும் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்த 3 கைத்துப்பாக்கிகள், 22 துப்பாக்கி குண்டுகள், 1 கையெறி குண்டு, 79,800 ரூபாய் ரொக்கம் ஆகியன மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மூவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்பதும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக பொமாய் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lashkar , 3 Lashkar-e-Taiba militants arrested for plotting attack
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்