சென்னை: காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள், தீயணைப்பு துறை வீரவணக்க நினைவு சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும் ஓட்டுநர் உரிமத்தின் நேரடி தொடர்பில்லாத சேவைகளை தொடங்கி வைத்தார். இந்நிகழச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.