பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அரவக்குறிச்சி தொகுதி உறுப்பினர் இளங்கோவன் (திமுக) பேசியதாவது: அரவக்குறிச்சியில் 2வது கூட்டுக்குடிநீர் திட்டம் நடந்து வருகிறது. ஆனால் சில இடங்கள் அதில் விடுபட்டுள்ளன. அவற்றை இணைக்க வேண்டும். அங்கு விளையும் முருங்கைக்காய் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே அவற்றை சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். அரவக்குறிச்சி தொகுதி பெரிய சட்டமன்ற தொகுதியாகும். இதுபோன்றவற்றை கருத்தில் கொண்டு எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தித் தர வேண்டும்.