சென்னை: ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியை விரட்டி அடித்தது தமிழ்நாடு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். வரலாறு தெரியாமல் ஒன்றிய அரசு எரியும் நெருப்பில் விரலை வைக்கவேண்டாம் என கி.வீரமணி எச்சரிக்கை விடுத்தார். மொழிப்பிரச்சனை உணர்வுப் பூர்வமான பிரச்சனை இந்தியை திணிக்கும் போதெல்லாம் தமிழ் மண் கிளர்ந்து எழுந்தது எனவும், வங்கதேசம் உருவானதற்கு அடிப்படைக் காரணம் மொழிப் பிரச்சனைதான் எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.