சென்னை: தமிழரின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பண்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பேரவையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். 17 மாவட்டங்களில் இசை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் கூறினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.