×

ராமநவமி அன்று அசைவ உணவு சாப்பிட்டதால் அராஜகம்! ஜேஎன்யு மாணவர்கள் பலர் காயம் : ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு மீது புகார்

டெல்லி : டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட சென்றவர்கள் மீது ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் மோதல் வெடித்துள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் ராமநவமியான நேற்று அசைவ உணவு வழங்கக்கூடாது என பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் போராட்டம் நடத்தி இருந்தது. ஆனால் இது ஜனநாயக விரோதமானது என இடதுசாரி மாணவர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் நேற்று சில மாணவர்கள் அசைவ உணவு உண்ணும் போது, அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பினர் அங்கு சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து இடதுசாரி அமைப்பு மாணவர்களுக்கும் ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 60 பேர் காயம் அடைந்து இருப்பதாக மாணவர்கள் தரப்பு கூறினாலும் 6 பேர் மட்டுமே காயம் அடைந்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அசைவ உணவு சாப்பிட்டதால் மோதல் நடந்தது என்பதை ஏபிவிபி மறுத்துள்ளது. ராமநவமி நிகழ்ச்சிக்கு இடதுசாரி மாணவர்கள் தெரிவித்த எதிர்ப்பே மோதலுக்கு காரணம் என்று ஏபிவிபி மாணவர்கள் கூறியுள்ளனர். இரு அமைப்புகளின் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  



Tags : Anajayam ,Aveava ,Ramanawami ,JNU ,RSS , Ramanavami, Non-Vegetarian, Food, JNU, Student
× RELATED தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை...