×

எதிரிகள் கொலை செய்ய முயன்றதால் உயிருக்கு பயந்து பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய ரவுடி கைது

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (39). இவரது மனைவி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். மோகன் மீது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சில கம்பெனிகளின் கழிவுபொருட்களை வாங்கி விற்பனை செய்கிறார். தொழில் போட்டி காரணமாக ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூரை சேர்ந்த ரவுடிகள் மோகனை கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த மோகன் உயிருக்கு பயந்து வெவ்வேறு கார்களில் சுற்றி வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், மோகனின் காரை மடக்கி சோதனை செய்தபோது, 2 பட்டாக்கத்திகள் இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், உயிருக்கு பயந்து வெவ்வேறு கார்களில் கத்தியுடன்  திரிவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்மீது வழக்குப்பதிவு  செய்து கைது செய்தனர்.  பின்னர், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy , Rowdy was arrested in a car with firearms, fearing for his life as enemies tried to kill him
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...