×

மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்  வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மக்கள் நீதி மையம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சமையல் எரிவாயு, சொத்துவரி உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் பொருளாதார கொள்கையை சரிவர வரையரை செய்யாமலும், பல்வேறு செயல்திட்டங்களை மேம்படுத்தாமலும், வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை பரிசாக அளிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் எஸ்.கே.பி.கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர். மேலும், பைக்கில் மாலை அணிவித்து அபாய குலவை சத்தம் எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : People's Justice Center , People's Justice Center protest
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...