×

கிடார் வாசித்தபடி புஷ்பா பட பாடலை தெலுங்கில் பாடி டிவிட்டரில் பதிவிட்ட கரூர் கலெக்டர்

கரூர்: கிடார் வாசித்தபடி புஷ்பா பட பாடலை தெலுங்கில் பாடி டிவிட்டரில் கரூர் கலெக்டர் பதிவிட்டுள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கில் பிரபலமானது. இதில், தமிழில் பார்வை கற்பூர தீபமா? பேச்சே கல்யாணி ராகமா? என்ற பாடல் தெலுங்கில் பங்கார மாயனே ஸ்ரீ வள்ளி என தொடங்கும். இந்த பாடலை பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்பாடலை கரூர் கலெக்டர் பிரபு சங்கர், கிடார் இசைத்த வண்ணம் தெலுங்கில் பாடி, 1.39 நிமிடம் கொண்ட காணொலியை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த டிவிட்டர் பதிவில் நீண்ட வேலைக்கு பிறகு நானும்  ‘‘ஸ்ரீ வள்ளி’’ பாடலை இசைத்துள்ளேன். நான் தெலுங்கு மொழி பேசா விட்டாலும், புஷ்பா படத்தின் தெலுங்கு பதிப்பு சிறப்பாக உள்ளது. நான் பாடுவதில் உள்ள தவறுகளை மன்னிக்க வேண்டும் எனகுறிப்பிட்டுள்ளார்.

Tags : Karur , Karur collector who sang Pushpa movie song in Telugu while playing guitar and posted it on Twitter
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்