×

சீனாவின் அதிகரிக்கும் கொரோனா.. 23 நகரங்களில் ஊரடங்கு.. கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க தடை

பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 22,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஓராண்டிற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் சீனா முழுவதும் 56,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஷாங்காய் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2 கோடியே 60 லட்சம் பேர் வசித்து வரும் மிகப்பெரிய வர்த்தக நகரமான ஷாங்காய் நகரில் மார்ச் 28ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இங்கு படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கணவன் - மனைவி ஒரே படுக்கையில் தூங்காவோ, முத்தமிட்டுக் கொள்ளவோஎன்று சீன அரசு புது உத்தரவை பிறப்பித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் ஒருவரை ஒருவர் கட்டியணைக்கக் கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாங்காய் நகரில் ஆம்புலன்ஸ் வாகனங்களை தவிர வேறு எந்த வாகனத்தையும் காண முடியவில்லை. நேற்று முன் தினம் 20,398 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று அது 22,609 ஆக அதிகரித்துள்ளது.. பிற நகரங்களிலும் தொற்று பரவல் தொடர்வதால் 23 நகரங்களில் முழுமையான அல்லது பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 19 கோடி பேர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


Tags : China , China, corona, curfew
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...