×

உசிலம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.36 கோடி கையாடல்: 2 பேர் மீது புகார்

உசிலம்பட்டி:   மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஏ 1683 பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அரசு பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் செயலாளராக இருந்தவர் சுகந்தகுமார், கணினி எழுத்தராக இருந்தவர் மாயி. கடந்த ஒரு மாதமாக, இச்சங்கத்தின் 2016-17, 2017-18, 2018-19ம் ஆண்டு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.

இதில், சுகந்தகுமார், மாயி இருவரும், வசூல் செய்த சங்க பணத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ.2 கோடியே 36 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அச்சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சுகந்தகுமார், மாயி ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் திருமங்கலத்தில் உள்ள துணை பதிவாளர், இந்த இரு நபர்கள் மீதும்  துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது
கையாடல் செய்த இவர்கள் மீது  உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில்  புகாரளிக்கப்பட்டுள்ளது.

Tags : Usilambati Co-operative Association , Usilampatti, Co-operative Society, Complaint
× RELATED பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர்...