சென்னை: மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா(திமுக)பேசுகையில், ‘‘மன்னார்குடியில் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியாகும். எனவே இங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாம். அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.