×

போலீஸ் ஸ்டேஷனை சுத்தம் செய்து அறிக்கை தர வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் உயரதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் 2வது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைப்பிடிக்க வேண்டும். அதனை மேற்பார்வையிட ஒரு காவல் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். எந்த முன் அறிவிப்புமின்றி பார்வையிட்டு சிறந்த காவல் நிலையம் அல்லது அலுவலகத்தை தேர்வு செய்து வெகுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மேற்கண்ட அறிவுரைகள் சரிவர பின்பற்றப்படவில்லை. எனவே, மாதத்தில் 2வது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைபிடித்து தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும்.  அதன் தொடர்ச்சியாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறத்தையும் வருகின்ற சனிக்கிழமை(இன்று) தூய்மை செய்து அதன் அறிக்கையை வரும் 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Tags : DGP ,Silenthrababu , The police station should be cleaned and reported: DGP Silenthrababu orders
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...