×

பெரம்பூரில் சிறுமி பலாத்காரம் தாய், கள்ளக்காதலன் கைது

சென்னை:  சென்னை பெரம்பூர் மடுமா நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய மேரி (31) பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் தனது 17 வயது மகளை தன்னுடன் பழகி வந்த  தமீன் அன்சாரி (32)  என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கூறியிருந்தார்.

இதுகுறித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா  வழக்குப்பதிவு செய்து, சிறுமி மற்றும் அவரது தாயை தனித்தனியாக விசாரித்தார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:  சிறுமியின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் ஆரோக்கியமேரி கோயம்பேட்டில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது, ஜாகிர்உசேன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். அதன் பிறகு, ஜாகிர் உசேன் ரயில் விபத்தில் இறந்துவிட, அவரது அண்ணன் தமீம் அன்சாரி அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார்.  அவர் ெபரம்பூரில் உள்ள சிறுமியின் தாய் வீட்டுக்கே வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தமீம் அன்சாரி  அடிக்கடி சிறைக்கு சென்றுள்ளார். ஒரு வழக்கில் சிறைக்கு சென்று 5 மாதங்களாக வெளியே வராததால் சிறுமியின் தாய் ஆரோக்கியமேரிக்கு அம்பத்தூரில் வசித்து வந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆரோக்கியமேரி, அம்பத்தூரில் ராஜேசுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது ராஜேஷுக்கும் ஆரோக்கிய மேரியின் மகளுக்கும் பழக்கும் ஏற்பட்டது. ராஜேஷ் ஆரோக்கியமேரிக்கு தெரியாமல் சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விஷயம் ஆரோக்கியமேரிக்கு தெரியவர, ராஜேசுடன் தொடர்பை துண்டித்துவிட்டு, ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு ெசய்துவிட்டு,  தாம்பரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் சிறுமியை தங்க வைத்துள்ளார். மீண்டும் ராஜேஷ் யாருக்கும் தெரியாமல் சிறுமியை அழைத்துக்கொண்டு வேலூருக்கு சென்றுவிட்டார். அப்போது, சிறையிலிருந்து வெளியே வந்த தமீம் அன்சாரியிடம் நடந்தவற்றை ஆரோக்கிய மேரி கூறி அழுதுள்ளார். உடனே இருவரும் சேர்ந்து வேலூருக்கு சென்று சிறுமியை மீட்டு சென்னை பெரம்பூருக்கு அழைத்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமீம் அன்சாரி குடிபோதையில் சிறுமியிடம்  ஏற்கனவே நீ கர்ப்பம் ஆனவள்தானே என்னுடன் வா என்று கூறியுள்ளான். அதற்கு சிறுமி மறுக்கவே, பலாத்காரம் செய்ய முயன்றதும், அப்போது தனது மகளை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஆரோக்கியமேரி புகார் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.   ஏற்கனவே ராஜேஷ் சிறுமியிடம்  உறவு கொண்டு கர்ப்பமான விஷயத்தை போலீசிடம் தெரியப்படுத்தாமல் மறைத்த ஆரோக்கிய மேரியையும் கள்ளக்காதலன் தமீம் அன்சாரியையும்  போக்சோ சட்டத்தில்  போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.

Tags : Perambur , Girl raped in Perambur, mother, boyfriend arrested
× RELATED பெரம்பூரில்தான் இந்த நிலை… இப்தார்...