சென்னை: இந்தி பேசாத மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இந்தியை திணிப்பதில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தீவிரம் காட்டுகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் இந்தி பற்றிய உரை அரசியலமைப்பு மற்றும் ஆட்சி மொழிகள் சட்டத்திற்கு விரோதமானது. பாஜகவின் இந்தி திணிப்பிற்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறினார்.