திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் 15 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.