×

அமலாக்கத் துறையில் உமர் அப்துல்லா ஆஜர்

புதுடெல்லி:ஜம்மு காஷ்மீர் வங்கிக்கு  கடந்த 12 வருடத்திற்கு முன்பு மும்பையில் நிலம் வாங்கியதில் முறைக்கேடு நடந்து இருப்பதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து  அவர் டெல்லியில் உள்ள அமலாக்க துறை முன்பு நேற்று ஆஜரானார்.


Tags : Omar Abdullah Azar , Omar Abdullah Azar in the Enforcement Department
× RELATED உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக...