விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிரபல ரவுடி மாடசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, மைத்துனர் கைது செய்யப்பட்டனர். அடிக்கடி தகராறு செய்ததால் 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, மைத்துனர் சேர்ந்து மாடசாமியை கொலை செய்து புதைத்துள்ளனர். ரவுடி மாடசாமியின் சகோதரி அளித்த புகாரின் பேரில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.