சென்னை: திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை அரசே கொள்முதல் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் காந்தி தெரிவித்திருக்கிறார். கதர் வாரியம் அதிக பயனாளர்களுடன் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கதர் வாரியத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை 400 ஆக குறைக்கப்பட்டது. தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி உள்ளது என அமைச்சர் காந்தி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்விக்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி பதிலளித்தார்.