ஐதராபாத்: சபரிமலை செல்வதற்காக மாலை போட்டு விரதம் இருக்கிறார் ராம்சரண். ஆர்ஆர்ஆர் படத்துக்கான புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ராம்சரண். படம் வெளியான பிறகும் மும்பையிலே தங்கியிருந்து, அவ்வப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மீடியாவுக்கு பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் புரமோஷன் நிகழ்ச்சிக்காக வந்தபோது, கறுப்பு சட்டை பேண்ட் அணிந்து காவி துண்டு தோளில் போட்டிருந்தார். கால்களில் செருப்பு இல்லை. அப்போது இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டிருக்கிறேன் என ராம்சரண் கூறினார். இதற்காக 41 நாட்கள் அவர் விரதம் இருக்கிறார். ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.