சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போரில் தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தியாகி விருகம்பாக்கம் அரங்கநாதனின் மனைவியார் மல்லிகா மறைவுற்றார் என்பதறிந்து வருந்தினேன். மல்லிகா அவர்களை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.