×

பைக்கில் கஞ்சா கடத்தல்:2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: பைக்கில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டியில் இருந்து மாதர்பாக்கம் செல்லும் சாலையில், பாதிரிவேடு எஸ்ஐ இளங்கோ  தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இ. பதிவுடன் வந்த கார், பைக்குகளை சோதனை நடத்தி அனுப்பினர். பதிவு இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது ஒரு பைக் படுவேகமாக சென்றதால் அவரை மறிக்க போலீசார் முயன்றனர். ஆனால் பைக் நிற்காமல் சென்றதால் எஸ்ஐ மற்றும் போலீசார் விரட்டிச்சென்று அந்த பைக்கை சுற்றிவளைத்து பிடித்து அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். பைக்கில் சோதனை நடத்தியபோது 15 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து பாதிரிவேடு காவல்நிலையத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்ட நபர்கள் செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்  (26), கார்த்திக்  (24) என தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்டவர்களுக்கு யார் கஞ்சா சப்ளை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பைக்கில் கஞ்சா கடத்தல்:2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kummhippundi ,Thiruvallur district ,Gummipipundi ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்ட எல்லை, குடோனில்...